ஜல்லிக்கட்டு குறித்து பேச மறுப்பு வீடியோ கேமராவை பறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசம்

தினகரன்  தினகரன்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ், ஜல்லிக்கட்டு குறித்து பேச மறுத்து, வீடியோ கேமராவை பறித்து, அதில் இருந்த தனது வீடியோ பதிவை அழித்து, நிருபரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், வெளியே வந்த அவரை நிருபர்கள் வீடியோவில் படம் எடுத்தபடி ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி கேட்டனர். ஆனால் ஜல்லிக்கட்டு குறித்து எதுவும் பேச முடியாது என்று மறுத்த பிரகாஷ்ராஜ், திடீரென வீடியோ படம் எடுத்த ஒரு டிவி நிருபரிடம் இருந்து கேமராவை ஆவேசமாக பறித்தார். அதில், இருந்த தனது வீடியோ பதிவுகளை அழித்துவிட்டு, அந்த நிருபர் மீது தாக்குதல் நடத்தவும் முயன்றார். இதையடுத்து, பிரகாஷ்ராஜை, அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை