அலங்காநல்லூர்:காளைகளை கொண்டு வர கிராம மக்கள் அனுமதி மறுப்பு

தினமலர்  தினமலர்
அலங்காநல்லூர்:காளைகளை கொண்டு வர கிராம மக்கள் அனுமதி மறுப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் காளைகளை கொண்டு வர கிராம மக்கள் அனுமதி மறுத்துள்ளனர்.அலங்காநல்லுாரில் இன்று (22-01-17)ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

‛ஜல்லிக்கட்டுக்காக அவரச சட்டம் என்பது ஏமாற்று வேலை, நிரந்தர சட்டம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டத்தை தொடர்வோம்' என கூறி அலங்காநல்லுாரில் போராட்டம் தொடர்கிறது. வாடிவாசல் பகுதியில் ஏற்பாடுகளை செய்ய வந்த அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்குழுவினர் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியும் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், அலங்காநல்லுாரில் ஜல்லிக்காட்டிற்காக லாரிகளில் கொண்டு வரப்பட்ட காளைகளை அனுமதிக்க முடியாது என உள்ளூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூலக்கதை