மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் பைனலில் சாய்னா

தினகரன்  தினகரன்

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரீ கோல்டு பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். அரை இறுதியில் ஹாங்காங்கின் யிப் புய் யின்னுடன் நேற்று மோதிய சாய்னா 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அபாரமாக விளையாடிய அவர் 21-13, 21-10 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 32 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் போம்பாவீ சோச்சுவாங்குடன் (18 வயது) மோதுகிறார்.

மூலக்கதை