ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சுவீடனில் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சுவீடன் நாட்டில், தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சிங்கப்பூர், மலேஷியா என, பல நாடுகளில் வாழும் தமிழர்களும், போராட்டம் நடத்தி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், சுவீடனில் வசிக்கும் தமிழர்கள், அந்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள கோதன்பர்க் நகரில், நேற்று போராட்டம் நடத்தினர். கடும் குளிரில் நடந்த போராட்டத்தில், குழந்தைகள், பெண்கள் என, 150 பேர் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -