கத்தாரில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக குடும்பத்தோடு திரண்ட‌ தமிழர்கள்

தினகரன்  தினகரன்

கத்தார்: கத்தாரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமான தமிழர்கள் கைகுழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தோடு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  அனைவரும் கைகளில் ஜல்லிகட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியபடி தங்களது மன குமுறுலை வெளிபடுத்தினர்.கத்தாரில் பணியாற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மொலினா ஜாஹிர் ஹுசைன் மற்றும் பிலால் ஆகியோர் கூறியதாவது, வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் எங்கள் உணர்வுகள் தமிழகத்தில் உள்ளது அந்த வகையில் இந்த ஆதரவை தெரிவிக்கிறோம் என்றனர்.

மூலக்கதை