தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் மோடி; பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழர்களின் கலாசாரத்தை உணர்ந்து மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் பேசியதாவது:
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் நான் உறுதுணையாக இருப்பேன் என கூறியவர் பிரதமர் நரேந்திர மோடி. 24 மணி நேரத்திற்குள் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் அமைச்சகங்களும் மிக வேகமாக அனுமதி அளித்துள்ளன.
ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதற்கு பிரதமரின் உதவி மிக முக்கியமானது. தமிழர்களின் கலாசாரத்தை உணர்ந்து மிகுந்த அக்கறை கொண்டவர் நமது பிரதமர். இவ்வாறு அவர் கூறினார்.