ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நிவின் பாலி டுவிட்டரில் கருத்து

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இதை பார்க்கும் போது ஆயுத எழுத்து படம் போல் உள்ளதாக பிரேமம் படத்தில் நடித்த நிவின் பாலி கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் காப்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் நேர்மையாகவும், ஒழுக்கத்துடனும் நடைபெறுவதாகவும் நிவின் பாலி டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை