சிறிலங்காவில் அறிமுகமாகும் விசேட அதிவேக தொடருந்து சேவை!

PARIS TAMIL  PARIS TAMIL

 வார இறுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்ல புதிய அதிவேக தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

 
அதற்கமைய, வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணியளவில் கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புதிய அதிவேக தொடருந்து புறப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
 
மேலும், தொடருந்து மாலை 7.03 மணியளவில் மாத்தளையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
குறித்த தொடருந்து மீண்டும் சனிக்கிழமை காலை 6.40 மணியளவில் மாத்தளையில் இருந்து புறப்பட்டு காலை 11.15 மணியளவில் கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய அதிவேக தொடருந்தில் 240 பயணிகள்,பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை