ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்ததுதான் நிரந்தர தீர்வு: முதல்வர் திட்டவட்டம்​

தினகரன்  தினகரன்
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்ததுதான் நிரந்தர தீர்வு: முதல்வர் திட்டவட்டம்​

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். அவசரச் சட்டம் கொண்டு வந்ததுதான் நிரந்தர தீர்வு என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்ட மன்ற கூட்டத்தில் நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும். அறவழியில் போராடிய இளைஞர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

மூலக்கதை