ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்
எஸ்.கணேசன்
நுவரெலியா மாவட்டத்தில் இன்று நிலவிய மோசமான வானிலை காரணமாக கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் திடீரென தரையிரக்கம் செய்யப்பட்டது.
அங்கிருந்து ஜனாதிபதி, தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்துக்கு வாகனத்தில் பயணித்தார்.
இதன்போது, கொட்டகலை மக்களைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடன் கலந்துரையாடினர்.