ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்
தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
மத்திய அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவரச் சட்டத்துக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம், ஜல்லிக்கட்டுக்கு இதுவரை இருந்த தடை நீங்கியது.
இதையடுத்து, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன.