ஐரோப்பா சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பில் திறக்கப்படும் ஹோட்டல்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐரோப்பா சுற்றுலா பயணிகளுக்காக கொழும்பில் திறக்கப்படும் ஹோட்டல்கள்!

 ஐரோப்பாவிலிருந்து சிறிலங்கா செல்லும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
இதற்காக கொழும்பில் சர்வதேச தரம்வாய்ந்த பல ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஐரோப்பா கண்டம் குறித்து விடேசமாக கவனம் செலுத்துவதற்காக சுற்றுலாத்துறை ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு 2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 
2017 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளிநாட்டு ஊடகமொன்றிடம் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, சிறிலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2020 ஆம் ஆண்டளவில் 4 மில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
 

மூலக்கதை