அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 66ஆவது மைல் கல் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியில் ஒரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, அதே திசையில் பயணித்த மற்றுமொறு கனரக வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானில் பயணித்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையிலும், ஏனைய 6 பேரும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினையடுத்து, கனரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.