தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும் : தம்பிதுரை நம்பிக்கை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: விரைவில் அவசர சட்டம் கொண்டு வருமாறு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக எம்.பி.க்கள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை அவசர சட்டம் இன்று பிறப்பிக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசே அவசர சட்டத்தை கொண்டு வந்து இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதே போல் மாநிலங்களின் உரிமை, கலாச்சாரம், மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசு தவறினால் என்ன நிலை ஏற்படும் என்பதை தமிழகத்தில் பார்க்கிறோம் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஒரே மொழி ஒரே கலாச்சாரத்தை புகுத்தினால் விபரீதம் ஆகும் என்று தம்பிதுரை தெரிவித்தார். இதே போல் காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக எம்பிக்களை பிரதமர் மோடி சந்திக்காதது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை