நான் பீட்டா உறுப்பினர் அல்ல ரஜினி மகள் சவுந்தர்யா மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நான் பீட்டா உறுப்பினர் அல்ல ரஜினி மகள் சவுந்தர்யா மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடங்கிய போராட்டம் இந்தியாவை கடந்து உலக நாடுகள் முழுவதும் நடக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஆக்ரோஷமாக முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். சவுந்தர்யாவின் வழிகாட்டுதலில்தான் பல நடிகர், நடிகைகள் பீட்டாவில் உறுப்பினர் ஆனதாகவும் வதந்தி பரவி வருகிறது.

இது சவுந்தர்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சவுந்தர்யா தனது வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

நான் பீட்டா அமைப்பின் உறுப்பினர் அல்ல. ஜல்லிக்கட்டுக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன் என சவுந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு எதிராக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


.

மூலக்கதை