காவ்யா மாதவனை திட்டி தீர்க்கும் நெட்டிஸன்கள் போலீசில் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவ்யா மாதவனை திட்டி தீர்க்கும் நெட்டிஸன்கள் போலீசில் புகார்

மலையாள நடிகை மஞ்சுவாரியரிடமிருந்து விவாகரத்து பெற்ற திலீப்பும், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற காவ்யா மாதவனும் காதலித்து வருவதாக தகவல் நிலவிவந்தது. இதை இருவரும் மறுத்துவந்தனர்.

கடந்த ஆண்டு இருவரும் திடீரென்று திருமணம் செய்துகொண்டனர்.
மனமொத்த தம்பதிகளாக இருவரும் வாழத் தொடங்கியிருக்கும் நிலையில் இணையதளத்தில் காவ்யா மாதவனை பலர் கடுமையாக விமர்சித்தும், திட்டியும் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.

திலீப்பை மஞ்சுவாரியர் பிரிவதற்கு காவ்யாதான் காரணம் என்று இன்னமும் புகார் கூறி வருகின்றனர். தவிர அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக தாக்கியும் வருகின்றனர்.

பொறுத்துப் பொறுத்து பார்த்த காவ்யா மாதவன் தற்போது கேரள போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

தன்னை விமர்சித்தும், தாக்கியும் கமென்ட் வெளியிடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரியிருக்கிறார். இதேபோல் கடந்த 2 மாதத்துக்கு முன் காவ்யா பெயரில் போலியான இணைய தள கணக்கை தொடங்கி அவர்  வெளியிடுவதுபோல் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அளிக்கப்பட்ட புகாரின் போரில் போலீசார் 2 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை