ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி - ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்ககோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநங்கைகள் கும்மியடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், ஜல்லிக்கட்டு தடையை நீக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

.

மூலக்கதை