அதிமுக முன்னாள் எம்எல்ஏ தீபா பேரவையில் இணைந்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தீபா பேரவையில் இணைந்தார்

உடுமலை - கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மா. பா. ரோகிணி என்கிற கிருஷ்ணகுமார் (48). இவர், கடந்த 2001 முதல் 2006 வரை கோவை பேரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ. வாக இருந்தார்.

நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவக்கியுள்ள ஜெயலலிதா-தீபா பேரவையில் இணைந்தார். இவருடன், குறிச்சி எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி தயாளன் என்பவரும் தீபா பேரவையில் இணைந்தார்.


ஏற்கனவே, பொள்ளாச்சி முன்னாள் எம்எல்ஏ வி. பி. சந்திரசேகர், கோவை முன்னாள் மேயர் மலரவன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், மேலும் ஒரு மாஜி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை