ஜல்லிக்கட்டு தடை நீக்கும் வரை தமிழர்களின் போராட்டம் ஓயாது - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டு தடை நீக்கும் வரை தமிழர்களின் போராட்டம் ஓயாது  பி.ஆர்.பாண்டியன் பேட்டி

நீடாமங்கலம் - திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் அதனை ஏற்க மறுக்கும் மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார பண்பாட்டின் சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடை விதிப்பது அர்த்தமற்றது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பொதுமக்கள்  திரண்டு போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். அதையும் அரசு கண்டு கொள்ளவில்லை.

இது அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழகம் பாலைவனமாக காட்சியளிக்கிறது.

தமிழக முதல்வர் இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும். அதுவரை தமிழர்களின் போராட்டம் ஓயாது.

இவ்வாறு பி. ஆர். பாண்டியன் கூறினார்.

.

மூலக்கதை