கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் விடுக்கப்படும் அறிவித்தல்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் விடுக்கப்படும் அறிவித்தல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழக கவுன்ஸில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கூடிய அதன் விசேட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதால், அதனைக் கடைப்பிடித்தொழுகுமாறு சகல மாணவர்களும் அறிவுறுத்தப்படுவதாக, கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கேட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக பதில் துணைவேந்தரால் கையொப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நிர்வாகக் கட்டடத் தொகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு ரீதியில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் விடயங்கள் சம்பந்தமாக பின்வரும் அறிவித்தல் மேற்கொள்ளப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை 20.01.2017 அன்று பி.ப 4.30 மணியளவில் நடைபெற்ற அதன் விசேட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை எடுத்துக்கொண்டுள்ளது.

•  எல்லா மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும்.
•  இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்குத் தங்குமிட வசதி கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள இடங்களில் ஏற்படுத்தித்தரப்படும்.
•  எல்லா வருடத்தைச் சேர்ந்த அனைத்துப் பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் 20.01.2017 இலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
•  கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வந்தாறுமூலை வளாகம் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகம்; ஆகியன 21.01.2017 காலை 8.00 மணியிலிருந்து மாணவர்களுக்கு உட்புக விலக்களிக்கப்பட்ட இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
•  மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழக வளாகங்களில் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்குகின்ற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பம்
வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன்
பதில் உபவேந்தர்

மூலக்கதை