ஒற்றுமையாக போராடுவது எத்தகைய வெற்றியை தரும் என தமிழர்கள் நிரூபித்துள்ளனர் : இர்பான பதான்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஒற்றுமையாக இணைந்து போராடுவது எத்தகைய வெற்றியை தரும் என்று தமிழர்கள் நிரூபித்துள்ளதாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒற்றுமையும், அமைதியும் வெற்றியை ஈட்டி தந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனவும் இர்பான் பதான் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், பெண்கள் தன்னெழுச்சியான அமைதியான முறையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் உங்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறேன் என தெரிவித்திருந்தார். மேலும் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜு தொடர் ஆதரவு அளித்து வருகிறார். மேலும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இளைஞர்களின் அறப்போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை