திருப்புத்தூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்புத்தூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் பலி

திருப்புத்தூர் - சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கே. அழகாபுரியை சேர்ந்தவர் சாத்தையா (47). கோட்டையூர் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் தனது நண்பர்கள் காரைக்குடியை சேர்ந்த மாரியப்பன் (45), சுரேஷ் (36), செல்வராஜ் (40), ராமன் (35) ஆகியோருடன், காரில் நேற்று பழநி சென்று விட்டு வீடு திரும்பினார்.

காரை சாத்தையா ஓட்டி வந்தார். திருப்புத்தூர் அருகே மாங்குடி விலக்கு ரோட்டில் நள்ளிரவு 1 மணியளவில், சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த சாத்தையா, மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

படுகாயமடைந்த ராமன், செல்வராஜ் ஆகியோர் காரைக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை