மதுரை போராட்டம் : ஆச்சரியப்பட்ட அமெரிக்க தம்பதி

தினமலர்  தினமலர்
மதுரை போராட்டம் : ஆச்சரியப்பட்ட அமெரிக்க தம்பதி

மதுரை: மதுரையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க தம்பதி டிம் ஆம்ஸ்ட்ராங், லிஸ் டெய்லர் ஆகியோர் நேற்று மதுரை மாணவர்கள் போராட்டத்தை பார்த்து, 'பிரம்மாண்டம்' என ஆச்சரியப்பட்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி,மதுரை மேலமாசி வீதியில் விஸ்வகர்மா சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த அமெரிக்க தம்பதி, போராட்டத்தை ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர்.அங்குள்ள இளைஞர்கள் அவர்களையும் போராட்டத்தில் பங்கேற்க வைத்து ஆரவாரம் செய்தனர். அவர்களின் உணர்வை மதித்து அவர்களும் உணர்வுபூர்வமாக போராட்டத்தில்பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
அவர்கள் கூறுகையில், "இந்தாண்டாவது பொங்கல் பண்டிகைக்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில் அதற்கு ஏற்ப சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால் இந்தாண்டும் நடக்கவில்லை. அதற்காக தமிழக மக்கள் மிக எழுச்சியாக போராடுகின்றனர். பிரம்மாண்டமாக உள்ளது. இப்போராட்டத்திற்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்," என்றனர்.

மூலக்கதை