பைக் மோதி வாலிபர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பைக் மோதி வாலிபர் சாவு

கும்மிடிப்பூண்டி - கும்மிடிப்பூண்டி அடுத்த தெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31). இவர், தனியார் நிறுவன ஊழியர்.

நேற்று முன்தினம் தெத்திக்குப்பம் மேம்பாலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (27) என்பவர் பைக்கில் வந்தார்.

இவர்களது பைக்குகள் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுரேஷ்குமார் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை