ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, பீட்டாவுக்கு எதிர்ப்பு - தீப்பந்தம் ஏந்தி மக்கள் பேரணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, பீட்டாவுக்கு எதிர்ப்பு  தீப்பந்தம் ஏந்தி மக்கள் பேரணி

கூடுவாஞ்சேரி - தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஒரு நாள் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் நேற்று காலை முதல் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தியும், காளை மாட்டுடன் பேரணியாக சென்றனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் பீட்டாவை தடை செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளரும், நந்திவரம், கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம். கே. தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி. கார்த்திக், நிர்வாகிகள் கே. பி. ஜார்ஜ், வக்கீல் ஜிகே. லோகநாதன், கோகுலநாதன்,முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் குமரவேல், அப்துல்காதர், சதீஷ்குமார், ரவி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் எம்கேபி. சதீஷ்குமார் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை