முன்ஜென்மத்தில் நிச்சயம் தமிழனாக தான் இருந்திருப்பேன் : மார்க்கண்டேயே கட்ஜு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: முன்ஜென்மம் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் அப்படி இருந்திருந்தால் நிச்சயம் தமிழனாய் தான் இருந்திருப்பேன் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சுழன்றடிக்கும் சூறாவளியாக திரண்ட தமிழ் இளைஞர்களின் வெற்றி, இந்தியர்களின் வெற்றி என்று மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். மேலும் ஒற்றுமையுடன் திரண்டால் அதனை தடுக்கும் சக்தி உலகில் இல்லை என நிரூபணம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார். இதே போல் நேற்று அவர் தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உறுதியுடன் தெரிவித்தார். அப்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் போது அதனை நேரில் காண வருவேன் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மூலக்கதை