சிக்கலில் பொன்சேகா! சுற்றி வளைத்த புலனாய்வுத்துறை

PARIS TAMIL  PARIS TAMIL
சிக்கலில் பொன்சேகா! சுற்றி வளைத்த புலனாய்வுத்துறை

 சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் நீண்டநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத் தளபதியாக பதவியில் இருந்த போதே, 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
 
இந்தக் கொலையுடன் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
 
பல மணிநேரம் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை