பொதுச் சுகாதார பரிசோதகர் கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டல் ஒன்றுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக, ஹோட்டல் உரிமையாளரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரை கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.