துளியும் வன்முறையின்றி நடக்கும் இளைஞர்களின் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு: மம்மூட்டி

தினகரன்  தினகரன்

கொச்சி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்துள்ள இளைஞர்களின் எழுச்சி போராட்டம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது. இது குறித்த பல திரைபிரபலங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது கேரளா சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: எந்த ஒரு அரசியல் கட்சி சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையும் இன்றி ஆண், பெண், சாதி, மத பாகுபாடு இன்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் துளியும் வன்முறையின்றி போராடி கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் போராட்டம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் தோழர்களே என்று கூறியுள்ளார்.

மூலக்கதை