திருவான்மியூரில் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவான்மியூரில் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்

துரைப்பாக்கம் - செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி, அடையாறு, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கானத்தூர், உத்தண்டி, ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம் ஆகிய இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

ஆட்டோக்கள் ஓடவில்லை. திருவான்மியூர் பஸ் டெப்போவில் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ் நிலைய நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி இளைஞர்கள் பீட்டா உருவ படத்தை பாடையாக கட்டி, மெரினாவில் போராட்டம் நடக்கும் இடத்துக்கு நடந்தே கொண்டு சென்றனர். சோழிங்கநல்லூர் தனியார் கலைக்கல்லூரி, காரப்பாக்கம் தனியார் பொறியியல் கல்லூரி, துரைப்பாக்கம் பொறியியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள், கானத்தூரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் சாலை மறியல் செய்தனர்.

பள்ளிகள், கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் விடுதிகளும் மூடப்பட்டன.

.

மூலக்கதை