லாச்சப்பல் அருகில் மெட்ரோவிற்குள் பயணிகள் மீது கத்திக்குத்து - பெரும் பதற்றம்!!
பயணிகள் மீது கண்டபடி மெட்ரோவின் பணிகள் மீது கத்தியால் குத்தியும், குத்த முற்ப்பட்டும், ஒரு குற்றவாளி நேற்று இரவு பயணிகளை அச்சுறுத்தி உள்ளார். பரிஸ் பத்திற்கும் பதினொன்றிற்கும் இடைப்பட்ட மெட்ரோ நிலையங்களில், அச்சமூட்டும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
21h15 அளவில் 7ம் இலக்க மெட்ரோவில் ஒரு நபர் அங்கு நின்ற பயணியைக் கத்தியால் குத்தி விட்டு, லாச்சப்பல் - ஸ்டாலின்கிராட் பகுதியில் இருக்கும் Rique மெட்ரோவினால் தப்பிச் சென்றுள்ளார். கத்திக்குத்திற்கு இலக்கான பயணியை, உடனடியாக சக பயணிகள் வைத்திசாலையில் சேர்த்துள்ளார்கள்.
தொடர்ந்து 22h45 அளவில் கார்-து-நோர்திற்கு அடுத்த 5ம் இலக்க மெட்ரோ நிலையமான Jacques Bonsergent இல் வைத்து ஒரு பயணியை இந்தக் குற்றவாளி குத்த முயன்றுள்ளார். ஆனால் அது தடுக்கப்பட, குற்றாவாளி தப்பித்துள்ளார்.
இறுதியாக 00h50 இற்கு, கார்-து-லேஸ்ட் மெட்ரோ நிலையத்தில், ஒரு RATP அதிகாரியையும், இரண்டு பயணிகளையும் கத்தியால் குத்தி விட்டுக் குற்றவாளி தப்பித்துள்ளான்.
அனைத்துச் சம்பவங்களின் சாட்சிகளின் படியும் அனைத்துத் தாக்குதல்களையும் நடாத்தியவரும், ஒரே குற்றவாளிதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறையினர் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.