2020ஆம் ஆண்டில் சிறிலங்காவை முற்றுகையிடவுள்ள பிரான்ஸ் சுற்றுலா பயணிகள்!

PARIS TAMIL  PARIS TAMIL
2020ஆம் ஆண்டில் சிறிலங்காவை முற்றுகையிடவுள்ள பிரான்ஸ் சுற்றுலா பயணிகள்!

 அண்மைய காலமாக  சிறிலங்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 

 
குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பணிகள் சிறிலங்காவுக்கு செல்கின்றனர்.
 
இந்நிலையில், 2020ஆம் ஆண்டளவில் சிறிலங்காவுக்கு செல்லும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜீன் மெரின் சூ தெரிவித்துள்ளார். 
 
கடந்த 2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு 20 ஆயிரம் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.
 
இந்நிலையில், 2017ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கு செல்லும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை