கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய மாணவன் பலி!

PARIS TAMIL  PARIS TAMIL
கிளிநொச்சியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய மாணவன் பலி!

 ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஊடகத்துறை மாணவன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்றுமாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
 
இந்தப் போராட்டத்தில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற ஊடகத்துறை மாணவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
 
 
உந்துருளியில் பயணித்த குறித்த இளைஞர் பாரஊர்தி ஒன்றில் மோதுண்டு உயிரிந்துள்ளார்.
 
புளியம்பொக்கணையில் நேற்றிரவு 7.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
 
இந்தச் சம்பவத்தில் மரணமான சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை கற்கைநெறியை கடந்த ஆண்டிலேயே நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை