2011க்கு பிறகு முதல் சதம்

தினகரன்  தினகரன்

* 2011 உலக கோப்பை தொடரில்,வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டிக்கு பிறகு, யுவராஜ் சிங் அடித்துள்ள முதல் சதம் இது. இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 17 இன்னிங்சில் இவரது சராசரி வெறும் 18.31 மட்டுமே. இந்த காலகட்டத்தில் 10க்கும் அதிகமான இன்னிங்சில் விளையாடிய முதல் 7 பேட்ஸ்மேன்களில் மிக மோசமாக விளையாடியவராக இருந்தார். இத்தகைய மோசமான புள்ளி விவரங்களை நேற்று சிதறடித்த யுவராஜ், மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.* 150 ரன்களே ஒருநாள் போட்டியில் யுவராஜின் அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன், ராஜ்கோட்டில் கடந்த 2008ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 138 ரன் எடுத்துள்ளார். *  ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையுடன், முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் யுவராஜ் படைத்துள்ளார்.

மூலக்கதை