இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி வெற்றி

தினகரன்  தினகரன்

கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 150, தோனி 134 ரன்கள் எடுத்தனர். 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

மூலக்கதை