நயன்தாரா பிரபுதேவாவை சந்தித்த காரணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
நயன்தாரா பிரபுதேவாவை சந்தித்த காரணம்!

 சிம்புவுக்கு பிறகு, நயன்தாராவின் இரண்டாவது காதலர் பிரபுதேவா. நயனுக்காக மனைவியையே விவாகரத்து செய்தார் பிரபுதேவா.

பிரபு தேவாவுக்காக படங்களை குறைத்து,நடிப்பதையே விட்டுவிட நினைத்தார் நயன்.
 
இதற்காக மும்பையில் ஒரு டான்ஸ் ஸ்கூல் , அபார்ட்மெண்ட் எல்லாம் ரெடி. அப்படி ரெடி செய்தும்,பிள்ளைகள் மேலே ரொம்ப கவனமாக இருக்கார் பிரபு தேவா என்று சின்ன பொஷஷிவ்னெஸ் இரண்டு பேரையும் பிரித்து போட்டது.
 
இந்த கேப்பில் நயனுடன் கைகோர்த்தவர் விக்னேஷ் சிவன். இந்த நட்பு போய்க்கொண்டு இருக்கும் சூழலில் தான் நீண்ட வருடங்களுக்கு பிறகு…நயனும் பிரபுதேவாவும் சந்தித்தார்கள் என்ற செய்தி கோலிவுட்டில் கசிகிறது.
 
இது உண்மையா? என்று தெரியவில்லை..என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
 
இப்போது, சந்தித்தது உண்மைதானாம்.
 
நயன்தாரா, பிரபுதேவா இருவரும் ஒன்றாக சுற்றியபோது வாங்கிய சொத்துக்கள், ஒரு உயில் சம்பந்தமாக பேசி இருவரும் முடிவெடுத்தார்களாம்.
 
அப்போது பிரபுதேவா நயனிடம் என் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறியா?” என்றாராம்.
 
அதற்கு நயன் ஒண்ணுமே சொல்லவில்லையாம்.
 

மூலக்கதை