சுற்­றுலா துறையை மேலும் முறைப்­ப­டுத்­தினால்ஐ.டி., துறையின் வளர்ச்­சியை விஞ்சும்

தினமலர்  தினமலர்
சுற்­றுலா துறையை மேலும் முறைப்­ப­டுத்­தினால்ஐ.டி., துறையின் வளர்ச்­சியை விஞ்சும்

ஐத­ராபாத்:'' இந்­திய சுற்­றுலா துறையை மேலும் அமைப்பு சார்ந்­த­தாக மாற்றி, ரொக்­க­மற்ற பரி­வர்த்­தனை அதி­க­மானால், ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில்­நுட்ப துறையின் வளர்ச்­சியை விஞ்சும்,'' என, அமெ­ரிக்­காவின் இமோரி பல்­க­லையின் சந்­தைப்­ப­டுத்­துதல் பிரிவு பேரா­சி­ரியர் ஜகதீஷ் என். சேத் தெரி­வித்­துள்ளார்.
அவர், ஐத­ராபாத் பல்­க­லையில், 'சந்­தைப்­ப­டுத்­து­வதில் நிகழும் மாற்­றங்கள்' என்ற சர்­வ­தேச கருத்­த­ரங்கில், பங்­கேற்று பேசி­ய­தா­வது:இந்­தி­யாவில் ஏரா­ள­மான சுற்­றுலா தலங்கள் இருந்தும், வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களின் எண்­ணிக்கை, ஆண்­டுக்கு, 80 லட்சம் என்ற அளவில் தான் உள்­ளது.இதை உயர்த்த, மத்­திய அர­சுடன், மாநில அர­சு­களும் பல்­வேறு ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்டும் ; அவை அமைத்த, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்கள், பொறி­யியல் கல்­லுா­ரிகள் போன்­றவை, ஐ.டி., துறையின் வளர்ச்­சிக்கு, வலு­வான அடிப்­படை கட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்தி தந்­தன.
இந்­திய ஐ.டி.,சேவைகள் துறையில், துவக்­கத்தில் சிறிய நிறு­வ­னங்கள் தான் ஈடு­பட்­டன. திடீ­ரென்று, அவை ஆண்­டுக்கு, 40,000 – 50,000 பட்­ட­தா­ரி­களை பணி­ய­மர்த்தும் அள­விற்கு, வளர்ச்சி பெற்­றன.இந்த அடிச்­சு­வட்டை பின்­பற்றி, சுற்­றுலா துறையும் வளர்ச்சி காண ஏரா­ள­மான வாய்ப்­புகள் உள்­ளன.சுற்­றுலா துறையை, மேலும் அமைப்பு சார்ந்த துறை­யாக மாற்ற, தேவை­யான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்த வேண்டும். குறிப்­பாக, வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களின் வச­திக்­காக, ரொக்கப் பரி­வர்த்­த­னையை குறைத்து, அனைத்து மட்­டங்­க­ளிலும், மின்­னணு பணப் பரி­மாற்ற வச­தியை ஏற்­ப­டுத்த வேண்டும்.
வெளி­நாட்டு பய­ணிகள், ஊர் திரும்பும் போது, கையி­லுள்ள ரொக்­கத்தை எப்­ப­டி­யா­வது செல­வ­ழித்து தீர வேண்­டிய இக்­கட்டை சந்­திக்­கின்­றனர். இந்த பிரச்­னைக்கு, மின்­னணு பரி­வர்த்­தனை தீர்­வ­ளிக்கும்.
சீனா, சிங்­கப்பூர் போன்ற நாடுகள், சுற்­று­லாவை மேம்­ப­டுத்த, அத்­துறை சார்ந்த சர்­வ­தேச கருத்­த­ரங்­குகள், நிகழ்ச்­சிகள் ஆகி­ய­வற்றை அடிக்­கடி நடத்­து­கின்­றன. இதை, இந்­தி­யாவும் பின்­பற்ற வேண்டும்.
ஐ.டி., துறையைப் போல, சுற்­றுலா துறையின் வளர்ச்­சிக்கு, அத்­துறை சார்ந்த தொழில்­மு­னை­வோர்கள் அதிக அளவில் உரு­வாக வேண்டும். சுற்­றுலா செயல்­பா­டுகள் அனைத்­தையும், கணி­னி­ம­ய­மாக்கி ஒருங்­கி­ணைக்க வேண்டும்.
ஐ.டி., சேவை­து­றையில், 20 ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்த வளர்ச்சி விகிதம், தற்­போது இல்லை. இந்­நி­லையில், அரசு உரிய நட­வ­டிக்கை எடுத்தால், சுற்­றுலா துறை, ஐ.டி., துறையை விட, வளர்ச்­சியில் விஞ்சும்.இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.
இந்­திய சுற்­றுலா சந்தை, தற்­போ­தைய, 12,000 கோடி டாலரில் இருந்து, 2020ல், 27,000 கோடி டால­ராக உயரும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது; இது, அரசு நட­வ­டிக்­கைகள் மூலம் 50,000 கோடி டால­ராக அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது.

மூலக்கதை