மேலும் ரூ.30,000 கோடிரிலையன்ஸ் ஜியோ முதலீடு
மும்பை:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஆண்டு, செப்., 5 முதல் மொபைல்போன் சேவையை இலவசமாக வழங்கி வருகிறது. இச்சேவை, மார்ச் இறுதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச அறிவிப்பால், ஏராளமானோர் ஆர்ஜியோ சேவையை பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, ஆர்ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 7.24 கோடியாக அதிகரித்துள்ளது.குறுகிய காலத்தில் இத்தகைய பிரமாண்ட வளர்ச்சி காரணமாக, ஆர்ஜியோ, அதன் தொலைதொடர்பு கட்டமைப்பு வசதியை, மேலும் பலப்படுத்த உள்ளது. இதற்காக, கூடுதலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.இத்தொகையை திரட்ட, 6 கோடி உரிமை பங்குகளை, ஆர்ஜியோ நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.இந்த நடவடிக்கை மூலம், ஆர்ஜியோ நிறுவனத்தின் மொத்த முதலீடு, 1.90 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.