இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சாளராகியுள்ள டோனி!

PARIS TAMIL  PARIS TAMIL
இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சாளராகியுள்ள டோனி!

 வலைப்பயிற்சியில் முன்னாள் கேப்டன் டோனி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஒரு நாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒரு நாள் போட்டி நாளை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.
 
நாளை நடைப்பெறும் போட்டிக்காக இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அணி பயிற்சியாளர் கும்ளே தலைமையில் நடைப்பெறும் பயிற்சியின் போது, கூல் கேப்டனாக திகழ்ந்த டோனி பந்து வீசி மகிழ்ந்தார். டோனியின் பந்தை மணீஷ் பாண்டே எதிர்கொண்டார்.
 
இதுவரை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் ஒரு சில போட்டிகளில் மட்டும் பந்துவீசிய டோனி, ஒரு நாள் தொடரில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார்.
 
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ் மேனான கேஎல் ராகுல் நாளை நடக்கும் போட்டில் பங்கேற்பாராயின், அவர் கீப்பர் செய்யலாம் எனவும், டோனி பந்துவீச வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.
 

மூலக்கதை