பினாகா ராக்கெட் சோதனை வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பினாகா ராக்கெட் சோதனை வெற்றி

பாலாசோர்: ஒடிசா மாநிலம், பாலாசோர் மாவட்டம், சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த  சோதனை மையத்திலிருந்து அதிநவீன மேம்படுத்தப்பட்ட ‘பினாகா மார்க்-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது பற்றி, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல் வருமாறு: பினாகா மார்க்-1 ராக்கெட்டைக் காட்டிலும் மார்க்-2 ராக்கெட் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள போர்க்கருவிகள் ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு அமைப்பு, தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகியவை  இணைந்து, பினாகா மார்க்-2 ராக்கெட்டை உருவாக்கியுள்ளன. இந்த ராக்கெட்டில் தாக்குதல்  நடத்துவதற்கான இலக்கை நிர்ணயித்தல், இலக்கை தேவைக்கேற்ப மாற்றியமைத்தல், திசையறிதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

பினாகா மார்க்-2 ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது தொடர்பாக பாதுகாப்பு  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை (டிஆர்டிஓ) ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் பாராட்டினார்.

.

மூலக்கதை