முன் வீட்டுடன் தகராறு; குடும்பஸ்தர் பலி
வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தர் இன்று பிற்பகல் முன்வீட்டில் வசித்து வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது. சடலம் அவ்விடத்தில் காணப்படுகின்றது. பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post முன் வீட்டுடன் தகராறு; குடும்பஸ்தர் பலி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.