கண்டலேறு அணையிலிருந்து கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் திறப்பு
கண்டலேறு : கண்டலேறு அணையிலிருந்து கூடுதலாக 200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் கூடுதல் நீர் திறக்கபப்ட்டுள்ளது. கூடுதலாக திறக்கப்பட்ட நீர் நாளை மறுநாள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பாக்கப்படுகிறது. இதுவரை 994 மில்லியன் கனஅடி நீரை ஆந்திர அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.