தவறுதலாக நண்பனை சுட்ட நபர்! - காவல்துறையினரிடம் சரண்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தவறுதலாக நண்பனை சுட்ட நபர்!  காவல்துறையினரிடம் சரண்!!

சம்பவம் இன்று அதிகாலை Drancy யில் இடம்பெற்றுள்ளது. நண்பன் ஒருவனை தவறுதலாக சுட்டுக்கொன்றுவிட்டதாக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
 
இன்று புதன்கிழமை அதிகாலை Seine-Saint-Denis யில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், 'தான் தவறுதலாக நண்பனை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்! முதல் கட்ட செய்தி சேகரிப்பின் படி, காவல் நிலையத்துக்கு வந்த நபர் உடையில் இரத்தம் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆராய்ந்தனர். சம்பவம் இடம்பெற்றது ஒரு கலையகம் எனவும், அங்கு தலையில் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கொல்லப்பட்டது தனது நண்பன் எனவும், விளையாட்டாக செய்தது விபரீதமாக முடிந்துவிட்டது எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்படு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 

மூலக்கதை