Champs-Elysées - துப்பாக்கிச்சூடு!! - மூவர் படுகாயம்!!
Champs-Elysées பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினர் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
Champs-Elysées பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இரு நபர்கள் வெளியே வந்துள்ளார்கள். மேலும் வெளியில் இருந்த VTC சாரதி ஒருவர்... குறித்த மூவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். rue de Ponthieu பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வாசலில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்த VTC சாரதி ஒருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தப்பிச்சென்றுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மூவர் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி தொடர்பான விசாரணைகளையும், கண்காணிப்பு கமரா ஆதாரங்களையும் காவல்துறையினர் சேகரித்துள்ளதாகவும், குற்றவாளி தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சாரதியை தவிர்த்து மற்ற இருவரும் தான் குற்றவாளியால் இலக்கு வைக்கப்பட்டதென்று தெரிவித்துள்ளார்கள்.