புத்தாண்டு முதல் டிஜிட்டல் மயமாகும் திரிபுரா

தமிழ் முரசு  தமிழ் முரசு
புத்தாண்டு முதல் டிஜிட்டல் மயமாகும் திரிபுரா

அகர்தலா - புத்தாண்டு முதல் திரிபுரா மாநிலம் டிஜிட்டல் மயமாகிறது. நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழலில் பாஜ அல்லாத மாநிலமான முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெறும் மாநிலமான திரிபுராவில் புத்தாண்டு முதல் அரசின் அனைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டலுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி அனைத்து அரசு அலுவலகங்களும், அவற்றின் பரிவர்த்தனைகளும் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் டிஜிட்டல்மயமாக்கப்படுகிறது.

அதே போல் வங்கி கணக்கு இல்லாத சுமார் 20 சதவீதம் பேருக்கு புத்தாண்டில் கணக்குகள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

.

மூலக்கதை