அழும்..சிரிக்கும்..சிந்திக்கும் ‘பாறை’

தமிழ் முரசு  தமிழ் முரசு
அழும்..சிரிக்கும்..சிந்திக்கும் ‘பாறை’

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ளது சிசிபு நகரம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அந்த பாறைகளில் உள்ள மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்பட்டவை அல்ல. அவை இயற்கையாகவே உருவானவை.

அத்தகைய மனித முக பாறைகளை சேகரித்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் இப்படி மொத்தம் 1700 மனித முக பாறைகள் உள்ளன.



சில முகங்கள் அழுத நிலையிலும், சில சிரித்த நிலையிலும் உள்ளன. சில பாறைகள் வியப்பால் வாயை பிளந்த நிலையிலும், மற்றவை சிந்தனை மற்றும் கவலையில் ஆழ்ந்த நிலையிலும் இருப்பது போன்று உள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக இதுபோன்ற பாறைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை