சென்னை அப்பல்லோவில் இருந்து நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டார்
சென்னை,
சென்னை அப்பல்லோவில் இருந்து நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நல குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் புறப்பட்டார். அவருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அப்பல்லோவில் இருந்து புறப்பட்டார். அவர்கள் இருவரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.