அப்பல்லோ அறிக்கையால் நிம்மதி அடைந்த அதிமுக தொண்டர்கள் - வீடியோ
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரவியதால் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சைகள் நடந்து வருகின்றன. அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோவின் இந்த அறிக்கையால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.