தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை இல்லை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேட்டி
புதுடெல்லி,
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மாரடைப்புக்கு பின்னர் கவலைக்கிடமானது. உடனே மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் நிருபர்கள் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையால் அங்கு சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘சட்டம்–ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. இதுவரை சட்டம்–ஒழுங்கு பாதிப்பு பற்றி எந்த தகவலும் வரவில்லை’’ என்று கூறினார்.