சவால்களை எதிர்கொண்டவர் ஜெயலலிதா – திருமாவளவன்
முதல்வர் ஜெயலலிதா ஏராளமான சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டவர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அதிமுக அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் ஜெயலலிதா, ஏராளமான சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டவர். முக்கியமாக இயல்புக்கு மாறான ஆற்றலையும், திறமையையும் கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.